Sunday, May 24, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 31-05-2015

தமத்திரித்துவப் பெருவிழா.



இன்றைய வாசகங்கள்:

 
 

திருப்பலி முன்னுரை: 

 

இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நமது தாய்திருச்சபை மூவொரு இறைவன் பெருவிழாவை கொண்டடி மகிழ்கின்றது. மூவொரு இறைவன் என்றால் தந்தை படைப்பாளராகவும், மகன் மீட்பராகவும், தூய ஆவி எந்நாளும் நம்மை பராமரிப்பவராகவும் நாம் விவிலியத்தின் அடிப்படையில் இம்மறைபொருளை உணர்கிறோம். அதன்படி வாழ்கின்றோம். மூவொரு கடவுளும் மூன்று கடவுளா? என்று சிலர் கேட்கலாம். ஆனால் படைத்தவர் தந்தை. அகரமும் னகரமும் நானே என்றவர் சுதன். நீரில் அசைவாடிக் கொண்டிருந்தவர் தூயஆவி.

மூவரும் ஒரே வல்லமை ஒரே இறைத்தன்மை கொண்டிருப்பதால் மூவரும் ஒரே கடவுளாக உள்ளனர். படைக்கப்பட்ட மானிடர் தவறும் போது தாயாகவும் தந்தையாகவும் உடன் பயணித்து மனித அவதாரம் பூண்டு மானிடரை மீட்கின்றார். பாடுகள் பலபட்டு மரித்து உயிர்த்து விண்ணகம் செல்லும் போது துணையாளரை அனுப்பி உலகம் இயங்கும் வரை உடன் பயணிப்பவரே தூயஆவியார். ஓரே கடவுள் மானிடருக்காக மூவொரு கடவுள் ஆனார். 



வாசக முன்னுரை:

 

1.முதல் வாசகத்தில் கடவுள் உலகில் மனிதரை படைத்த நாள் முதல் உலகின் ஒரு முனை முதல் மறுமுனை வரை நெருப்பின் நடுவே பேசிய கடவுள் நீங்கள் கண்டதுண்டா? சில அருங்குறிகள் வாயிலாக மக்களை வேறொரு நாட்டிற்கு அழைத்து வந்து உண்டா? என்ற இணையச்சட்ட நூலின் வாயிலாக 40 ஆண்டுகளின் பேரூரைகளை வாசிக்க கேட்போம். 

2.இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் உரோமை மக்களுக்கு "தூயஆவியால் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளாக உள்ளோம்". அவரை "அப்பா தந்தை" என்று அழைக்கும் போது தூயஆவி நமக்காக சான்று பகர்கின்றார் என்று உணர்த்துகின்றார். எனவே நாமும் கிறிஸ்துவின் பங்காளிகள் என்பதை உணர்ந்து இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.


விசுவாசிகள் மன்றாட்டு



1.திருஅவைக்காக…

 

வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில் உமது திருமகனின் அழைப்பை ஏற்று உமது திருச்சபையை ஆளும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர் தம் அழைப்பிற்கு ஏற்ப நற்செய்தியின் தூதுவர்களாக அவர்கள் வலம் வந்து கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

2. நாட்டிற்காக… 

 

கருணைக் கடலே எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்கள் அவரவர் இடத்தை பற்றிக் கொள்ள சுயநலத்தை நிலை நாட்டிக் கொள்ளாமல் உம் மக்களின் தேவைகளை உணர்ந்து பணி செய்யும் உத்வேகத்தை எம் நாட்டு தலைவர்களுக்கு வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3.இயற்கை வளங்களுக்காக …

 

மனிதன் பாங்குடன் வாழ இயற்தையை படைத்து ஆளும் எம் இறைவா! எங்கு நோக்கினும் இயற்கையை அழித்து மனிதனுக்கு தேவையான காற்று நீர், நிலம், ஆகாயம், பூமி ஆகியவற்றை வீணடிக்கும் வீணர்களிடமிருந்து காத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

4.முதியோருக்காக…

 

விண்ணும் மண்ணும் அழிந்து போகும் என் வார்த்தைகள் ஒருபோதும் அழியாது என்று இயம்பிய எம் இறைவா முதியோர்களை உமது வார்த்தையால் வளமை படுத்தி சோர்ந்துபோகும் தருவாயில் உமது வாக்கு அவர்களுக்கு பாதுகாப்பாய் அமைந்திடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம். 



எழுதியவர்: திருமதி அருள்சீலி அந்தோனி

Saturday, May 23, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் மன்றாட்டுகளும். -24-05-2015


தூய ஆவியாரின் பெருவிழா

இன்றைய வாசகங்கள்:

திருப்பலி முன்னுரை: 

 

இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்றைய வழிபாடு நமக்கு உணர்த்தும் செய்தி கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்கு பிறகு சோர்வுற்றிருந்த சீடர்களுக்கு "அஞ்சாதீர்கள். உங்களுக்கு துணையாளரை அனுப்புகிறேன். அவர் உங்களை உண்மையின் வழியில் வழி நடத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது" என்னதே ! தூய ஆவியாரை நம்மில் பொழிந்து அருளடையாளங்கள் நிறைவு செய்யப்பட்டு இயங்குகின்றோம்.

தூய ஆவியார் துணையால் துணிவுடன் ஏழுச்சிப் பெற்றனர் சோர்ந்திருந்த திருத்தூதர்கள். தூய ஆவியார் ஒருவரே! செயல்பாடுகள் பல வகையுண்டு! கடவுள் ஒருவரே! இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை ஆழப்படுத்தி மானிடரை அன்புறவில் வாழ்ந்து வளர்ந்து ஒருவரை ஒருவர் அன்பு செய்து இறையனுபவத்தில் ஊன்றிட இன்றைய தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது. 

வாசக முன்னுரை:

 

1.முதல் வாசகத்தில் தூயஆவியாரின் வருகை சீடர்கள் மீதும் அன்னை மரியாள் மீது பொழியப்பட்டு அனைவரையும் அக்னி நாக்குவடிவில் ஆவியார் இறங்கி பலரும் பல மொழிகளில் பேசியதையும் வந்தவர்கள் அவரவர்கள் மொழியில் கேட்டு பரவசம் அடைந்ததையும் தங்கள் சொந்த மொழியில் பேசியதை கேட்டு வியந்ததை குறித்துத் திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசிக்க கேட்போம். 

2.இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் கொரிந்து மக்களுக்கு தூயஆவியார் ஒருவரே செயல்பாடுகள் பல வகையுண்டு. கடவுள் உருவரே. ஆனால் சிலருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தையும், வேறுசிலருக்கு அறிவு செறிந்த சொல்வளத்தையும் வழங்குகிறார். அவரவர் தகுதிக்கு ஏற்ப அருள்வரங்களை வழங்குகிறார் என்ற சிந்தனைக்கு செவிமடுப்போம்.


விசுவாசிகள் மன்றாட்டு


1.திருஅவைக்காக…

துணையாளரை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று மொழிந்த எம் இயேசுவே உமது இறையரசை கட்டி எழுப்பும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள, குருக்கள், இருப்பதால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் தாம் பெற்றுக் கொண்ட தூஆவியாரின் ஆற்றலுக்கேற்ப ஒரே சமத்துவ சமுதாயம் படைத்திட போதுமான தூயஆவியாரின் அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

2. நாட்டிற்காக…

எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக என்று மொழிந்த இயேசுவே எமது நாட்டுத் தலைவர்கள் சாதி - சமயம் - இனம் - மொழி கடந்து செயலாற்றவும், இறையரசை மண்ணக மாந்தர்கள் சுவைக்கும் வாய்ப்பை தலைவர்கள் வாயிலாக வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3.அமைதிக்காக…

கருணை கடலே எம் இறைவா! எங்கு நோக்கினும் ஒரே குண்டு வெடிப்புகளும் - போரட்டங்களும், நிலநடுக்கங்களும் - வன்கொடுமைகள் - பாலியல் போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் உம் மக்களை உமது பாதம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கு துணையாளரின் வழி நடத்துதல் தொடர்ந்து கிடைத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

4.மாணவ செல்வங்களுக்காக…

வெற்றி வேந்தனே எம்இறைவா! தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை கிடைக்கப் பெற்று அதில் சாதனைப் படைத்திட துணையாரின் துணை வேண்டியும், அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டியும் இறைவா உமை மன்றாடுகின்றோம். 




எழுதியவர்: திருமதி அருள்சீலி அந்தோனி