பொதுக்காலம் ஆண்டின் 11ஆம் ஞாயிறு 12/06/2016
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
திருப்பலி முன்னுரை:
இறைஇயேசுவில் அன்பார்ந்த மக்களே! நம் ஆலயத்தில் குழுமியிருக்கும் இறைமக்களாகிய உங்களை பொதுக்காலம் ஆண்டின் 11ஆம் ஞாயிறைக் கொண்டாட அன்புடன் வரவேற்கின்றோம்.
நம் கடவுள் நம் குற்றங்களுக்கு ஏற்பத் தண்டிப்பவர் அல்ல. மாறாக மன்னித்து நம்மை ஏற்றுக்கொள்ளும் மன்னிப்பின் இறைவன், இரக்கமே உருவான இறைவன் என்பதை நம் மனதில் ஆழமாகப் பதிய வைத்துப் அவரின் அருளைப் பெற வேண்டுமென்று இன்றைய வாசகங்கள் மூலம் நமக்கு அழைப்பு விடுக்கின்றார் இறைமகன் இயேசு .
மன்னன் தாவீதுவிடம் நாத்தான் அவர் செய்ய தவறுகளை எடுத்துயெம்பியபோது அவற்றை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்பு கேட்டார். வரவிருந்த கேடுகளிலிருந்து தப்பினார்.
தான் செய்த பாவங்களை இயேசுவின் காலடியில் கொட்டி மன்னப்பு பெற்ற பாவியான மாது புது பிறப்பாய் மகிழ்ச்சியுடன் சென்றாள்.
இறை இரக்க
ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் பிறருடைய குற்றம் குறைகளை மன்னித்து அவர்களை ஏற்று வாழும் இனிய பண்பை நாம் அனைவரும் இதயத்தில் கொண்டு வாழ இத்திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் செபிப்போம். இறைஇரக்கத்தின் முகத்தைக் காண்போம்..
வாசக முன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
சாதாரண ஆடுமேய்ப்பவனாக இருந்த தாவீதை வலிமைமிக்க மன்னனாக மாற்றினார் இறைவன். எல்லா வளங்களையும் பெற்ற அவர் உரியாவின் மனைவியை
தனதாக்கிக் கொண்டார். இதன் மூலம் இறைவனுக்கு எதிராய் நடந்துக்கொண்டார். நாத்தான் அவர் செய்த தவறுகளை எடுத்துரைத்த போது தன் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.மன்னிப்பும் பெற்றார். இந்நிகழ்வை பதிவு செய்யும் இரண்டு சாமுவேல் நூலிலிருந்து வாசிக்க அதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியாரின் புகழ் பெற்ற சொற்தொடராகிய இனி வாழ்பவன் நான் அல்ல. கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்
மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன் என்பதைப் பற்றிய விளக்கம் அளிக்கின்றார். அதே வேளையில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராக ஆகமுடியாது என்று ஏடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கருத்துடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 32: 1-2. 5. 7. 11
பல்லவி: ஆண்டவரே, என் நெறிகேட்டையும் பாவத்தையும்
போக்கினீர்.
எவரது குற்றம்
மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ, அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ,
எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். -பல்லவி
என் பாவத்தை
உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை;
ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். -பல்லவி
ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். -பல்லவி
நீரே எனக்குப்
புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். -பல்லவி
நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். -பல்லவி
மன்றாட்டுகள்:
1. அன்புத் தந்தையே!
எம் இறைவா! இன்றைய சூழலில் திருஅவை எதிர்கொள்ளும் அனைத்து
சவால்களை கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ற அன்பின் பாதையில் வழிநடந்து செல்லும்
எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பொதுநிலையினர்
ஆகிய அனைவரும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப இறைவார்த்தையின் ஒளியில்
திரு அவையை முன் நின்று நடத்திச் செல்ல தேவையான வரங்களை பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை
மன்றாடுகின்றோம்.
2. திருவழிப்பாட்டின்
நாயகனே! எம் இறைவா! திருப்பலி
வெறும் வேடிக்கையாக நடைபெறும் நிகழ்வாக
அல்லாமல், இறைமக்கள் வாடிக்கையாக
வருவது ஒரு பழக்கமாக மாறிவிட்ட இன்றைய சூழலில் இருபால் துறவியரும்,
பொதுநிலையினரும், திருவழிப்பாட்டின் மேன்மையை உணர்ந்து பலியில் பங்கேற்பாளர்களாக, கிறிஸ்து
இயேசுவின் சாட்சிகளாக திகழ தேவையான உமது
இரக்கத்தின் ஆவியை பொழிய வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3
மனமாற்றத்தின் நாயகனே எம் இறைவா! பாவிகள்
மனம் திரும்ப வேண்டுமென நீர் விரும்புகின்றீர். பாவிகளில் முதன்மையான பாவி நான்
என்று தன்னை தாழ்த்திக் கொண்ட தூய பவுல்
போல நாங்கள் பிறருக்கும், உறவுக்கும், சமூகத்திற்கும் திருச்சபைக்கும் எதிராக
செய்த குற்றங்களை நீர் மன்னித்து புது படைப்பாக எங்களை மாற்றியருள வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. உறவின் ஊற்றாகிய இறைவா! இன்றைய சூழலில் கிறிஸ்துவத்திற்கு எதிராக எழுப்பப்படும் அநீதிகள், வன்முறைகள், கொலைகள் , தீவிரவாத செயல்கள் இவை அத்தனையும் உமது கருணைமிகு இரக்கத்தால் அனைவரும் உண்மையை உணர்ந்து அனைத்து மாந்தரும் ஒற்றுமையோடும், நீதி, நேர்மையோடும், ஒருவர் ஒருவரை புரிந்து கொண்டு மனித மாண்புகள் செழித்தோங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment